Rti fine
ஆர்டிஐ-யில் பதில் தராத துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு அபராதம் - தகவல் ஆணையம் அதிரடி - RTI FINE தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் தராத துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் இருவரும் ரூ.1,000 அபராதம் செலுத்த தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதுரை: கிராம நிர்வாக அலுவலர்களும்கூட பொது தகவல் அலுவலர்கள்தான் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய கூறு என்றாலும் அதனை தமிழ்நாடு தகவல் ஆணையமே மறுத்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர் வருத்தம் தெரிவிக்கிறார்.மதுரையைச் சேர்ந்த 'இந்தியன் குரல் உதவி மையம்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் என்.ஜி. மோகன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாளிட்ட கடிதத்தில், மதுரை மாவட்டம் முள்ளிப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலருக்கும், மேற்கண்ட அதே தேதியில் மண்ணாடி மங்கலம் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக 11 தகவல்களை கேட்டிருந்தார்.மேற்கண்ட இருவரும் தகவல் வழங்காத நிலையில் மேல் முறையீடு செய்திருந்தார். ...