பெண்கள் சொத்து
பூர்வீக சொத்தில் மகளுக்கு பங்கு உள்ளதா? தந்தையின் உயிலில் திருமணமான பெண்ணுக்கும் உரிமை உள்ளதா? சென்னை: பூர்வீக சொத்தில் யாருக்கு முழு உரிமை உள்ளது? தந்தை சொத்தில் மகளுக்கு உரிமை உள்ளதா? திடீரென ஒருவர் இறந்துவிட்டால், இறந்தவர்களின் சொத்துகளை மீட்க முடியுமா? இதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? இதைபற்றி சுருக்கமாக இங்கே நாம் தெரிந்து கொள்வோம். பூர்வீக சொத்துகளை மட்டுமே பாகப்பிரிவினை செய்ய இயலும். ஒருவர் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய தனிப்பட்ட சொத்துகளின் பெயரில் எவரும் உரிமை கொண்டாட இயலாது. அவரின் விருப்பப்படி விலைக்கு விற்கலாம். தானமாகவும் தரலாம். யாருக்கும் உயிலாகவும் எழுதலாம். மகளுக்கு உரிமை: தந்தை சுயமாக சம்பாதித்த சொத்தில், வாரிசுகளுக்கு உரிமை உள்ளது. இந்து வாரிசுரிமை சட்டம் 2005ன் படி, தந்தைய சுயமாக சம்பாதித்த சொத்தில், மகனுக்கு உள்ள அதே உரிமை, மகளுக்கும் உள்ளது. திருமணம் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி, பெண்களுக்கும் பங்கு உள்ளது. எனவே, 2005 ம் ஆண்டு திருத்தத்திற்குப் பிறகு, மகள் வாரிசாக அதாவது சம வாரிசாக கருதப்படுகிறாள். இப்போது மகளின் திருமணத்திற்கு பிறகும், தந்தைக்கு சொத்தின் வாரி...